Skip to content
Home » திருச்சியில் இந்திரா நினைவு தினம்…. பயங்கரவாத உறுதி மொழி ஏற்ற காங்கிரசார்

திருச்சியில் இந்திரா நினைவு தினம்…. பயங்கரவாத உறுதி மொழி ஏற்ற காங்கிரசார்

  • by Senthil

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின்  நினைவு  தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி  திருச்சி உறையூரில் உள்ள  இந்திராகாந்தி  திருஉருவ சிலைக்கு காங்கிரஸ் சார்பில், திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் தெற்கு மாவட்ட தலைவர் பி.கோவிந்தராஜ் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சேவாதள மாநில தலைவர் குங்ஃபூ விஜயன் கலந்துகொண்டு சிறப்பித்தார். மாநில சிறுபான்மை துறை துணை தலைவர் பேட்ரிக் ராஜ்குமார், மாமன்ற உறுப்பினர் சோபியா விமலா ராணி, பேராசிரியர் பெஞ்சமின், மனித உரிமைத்துறை ஜெயம் கோபி, கோட்ட தலைவர்கள் பிரியங்கா பட்டேல், ராஜா டேனியல் ராய், திருச்சி மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி ஷீலா செலஸ், மாவட்ட பொதுச் செயலாளர் எஸ் வி பட்டேல், மாநகர் மாவட்ட தகவல் மற்றும் சமூக ஊடக துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் லோகேஸ்வரன், கிழக்கு தொகுதி ஒருங்கிணைப்பாளர் டேவிட்,

இளைஞர் காங்கிரஸ் கிருஷ்ணா, வார்டு தலைவர்கள் கண்ணன், விமல், ஆனந்த் பத்மநாதன், விஜய் பக்தன், மலர் வெங்கடேஷ், ஹக்கீம், ஜாஹிர் உசைன், அண்ணாதுரை,ரவி, நடராஜன், தியாகி ராஜா, அழகர், பாபு, ஜாபர், கலைப்பிரிவு சிவா, திருவானைக்கோவில் விஸ்வநாதன், கருப்பையா, சம்பத், ஒளி முகமது, INTUC அன்பு ஆறுமுகம், குரு மாணிக்கம், பாலாஜி நகர் பாலு, கலியபெருமாள், கூத்தைப்பார் சம்பத், தெற்கு மாவட்ட துணைத் தலைவர் எழிலரசன், மணிகண்டம் வட்டாரத் தலைவர் கருணாகரன் மணப்பாறை வடக்கு வட்டார தலைவர் சிவசண்முகம், மாநகர மாவட்ட செயலாளர் ராஜா, தெற்கு மாவட்ட செயலாளர் அர்ஜுன், நந்தநல்லூர் வட்டாரத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தனசேகரன், மகிளா காங்கிரஸ் துணைத் தலைவர் கோகிலா, ரேணுகா, சந்திரா, மகிளா மாவட்ட பொதுசெயலாளர் ஸ்டெல்லா, ஒளிப்பதிவாளர் இருதயராஜ், உள்ளிடோர் திரளாக கலந்து கொண்டனர். அனைவரும் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழியை ஏற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!