Skip to content
Home » டோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு…..தமிழக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாள் சிறை…..

டோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கு…..தமிழக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு 15 நாள் சிறை…..

  • by Senthil

கடந்த 2013 ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்  சூதாட்டம்  நடந்ததாக புகார் வந்தது. இது குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் வெளியிட்ட அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

அதனடிப்படையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சி, தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்டஈடு கோரி கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி 2014ம் ஆண்டு  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  தனியார் தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார்  ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர்.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறி,  ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள்  சுந்தர், சுந்தர்மோகன்  அமர்வு இன்று தீர்ப்பளித்தனர். அதில்  சம்பத் குமாருக்கு  15 நாள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர்.  தண்டனையை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய 30 நாள் தண்டனையை நிறுத்தி வைப்பதாகவும் நீதிபதிகள்  உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!