Skip to content
Home » மயிலாடுதுறையில்…….புதுச்சேரி சரக்கு கடத்தி வந்தவர் கைது

மயிலாடுதுறையில்…….புதுச்சேரி சரக்கு கடத்தி வந்தவர் கைது

மகாத்மா காந்தி ஜெயந்தி யையொட்டி  இன்று தமிழ் நாட்டில்  டாஸ்மாக் சரக்கு விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.   இதையொட்டி அதிக விலைக்கு மது விற்கலாம் என  மணல்மேடு மேலத்தெருவை சேர்ந்த ராசாங்கம் மகன் சின்னராஜா(37) என்பவர்,   காரைக்காலிலிருந்து   167 மதுபாட்டில் மேலும் 100 லிட்டர் பாண்டிச் சாராயத்தை கடத்திவந்து  விற்பனைக்கு தயாராக வைத்திருந்தார்.
இந்த தகவல் கிடைத்ததும் மணல்மேடு காவல் ஆய்வாளர் மாரிமுத்து சப்இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் குழுவினர் இன்று சின்னராஜ் வீட்டில் சோதனை செய்தபோது காரைக்காலிலிருந்து கடத்திவரப்பட்டு கொல்லைபுறத்தில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் மற்றும்   கடத்தலுக்குப்  பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகயவற்றை போலீசார்  கைப்பற்றினர், சின்னராஜாவைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!