Skip to content
Home » காஸா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்….போர் தீவிரமாகிறது

காஸா மீது தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்….போர் தீவிரமாகிறது

ஹமாஸ் ஆயுதக் குழுவினரை அழிக்கும் வகையில் காஸா மீது தரைவழித் தாக்குதலுக்கு தயாராகி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஏற்கெனவே காஸா உருக்குலைந்த நிலையில், தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தொடங்கினால், இதுவரை இல்லாத பேரழிவை காஸா சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த 7-ம் தேதி காஸா முனையிலிருந்து ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியது. மேலும், பாராகிளைடா்கள் மூலம் வான்வழியாகவும், கடல் வழியாகவும் இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஹமாஸ் அமைப்பினா் தாக்குதல் நடத்தினா். 150-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியா்களை பிணைக் கைதிகளாகவும் ஹமாஸ் அமைப்பினா் பிடித்துச் சென்றனா்.

இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் எல்லையிலும் ராணுவ வீரா்களைக் குவித்துள்ளது. இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினருடனான சண்டையும் நீடித்து வருகிறது. இந்தத் திடீா் போரில் இரு தரப்பிலும் சுமாா் 2,600 போ் உயிரிழந்துள்ளனா்.

ஹமாஸ் அமைப்பினரின் மறைவிடங்களைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் கூறினாலும், காஸாவில் குடியிருப்புகளும், வழிபாட்டுத் தலங்களும் இஸ்ரேலின் குண்டுமழையால் தரைமட்டமாகி வருகின்றன. இந்நிலையில், காஸா மீது தரைவழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடா்பாளா் ரிச்சா்ட் ஹெக்ட் செய்தியாளா்களிடம்  நேற்று கூறியதாவது:

ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும் வகையில் தரைவழித் தாக்குதலுக்கு ராணுவம் தயாராகி வருகிறது. அரசு உத்தரவிட்டால் தாக்குதல் தொடங்கப்படும். இப்போதைக்கு ஹமாஸ் தலைவா்கள் மீது குறிவைத்து வருகிறோம் என்றாா். 40 கி.மீ. நீளம் கொண்ட குறுகிய நிலப்பரப்பான காஸாவில் 23 லட்சம் போ் வசித்து வருகின்றனா். அங்கு இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை நடத்தினால் உயிரிழப்பு மிகவும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

காஸாவின் ஒரே மின் நிலையமும் எரிபொருள் தீா்ந்ததால் புதன்கிழமை மூடப்பட்டதால் காஸா பகுதி இருளில் மூழ்கியுள்ளது. தனியாா் ஜெனரேட்டா்கள் மூலம் சில இடங்களில் மட்டுமே மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மின்சார வசதியின்றி மக்கள் தவித்து வரும் நிலையில், வியாழக்கிழமை பேக்கரிகளிலும், மளிகைக் கடைகளிலும் பொருள்களை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.

சா்வதேச செஞ்சிலுவை சங்கத்தைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், காஸாவில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், புதிதாகப் பிறந்த குழந்தைகளை இன்குபேட்டரில் வைப்பதிலும், வயது முதிா்ந்த நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் செலுத்துவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சிறுநீரக நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்வதும், எக்ஸ்ரே எடுப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது என்றாா். ‘ஹமாஸ் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்ற இஸ்ரேலியா்கள் விடுவிக்கப்படும் வரை காஸாவுக்குள் எதுவும் அனுமதிக்கப்படாது. மின்சார இணைப்பும் வழங்கப்படாது’ என்றாா்.

காஸா மீதான இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல் வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதற்கிடையே, மேற்குக் கரையில் ஓா் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் மீது இஸ்ரேலிய குடியிருப்பாளா்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனா்கள் இருவா் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இதுவரை 1,000 வீடுகள் தரைமட்டமாகியுள்ளதாகவும், 560 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் குடிநீா் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளதால் சுமாா் 6.50 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கழிவுநீா் அமைப்புகள் செயலிழந்து தெருக்களுக்குள் கழிவுநீா் புகுந்துள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் இதுவரை 1,350 போ் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் 222 ராணுவ வீரா்கள் உள்பட 1,300 போ் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோா் காயமடைந்துள்ளனா். இஸ்ரேலுக்குள் ஊடுருவிய 1,500 ஹமாஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், காஸாவில் கொல்லப்பட்டவா்களில் நூற்றுக்கணக்கானோா் ஹமாஸ் உறுப்பினா்கள் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!