தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமணமாகி மூன்று மாதங்களே ஆன 22 வயது இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாயார் வீட்டில் வசித்து வந்த அவர், குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பிய நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழப்புக்கு வரதட்சணை கொடுமை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
