Skip to content
Home » சென்னை, கோவை உள்பட 30 இடங்களில் ஐடி ரெய்டு

சென்னை, கோவை உள்பட 30 இடங்களில் ஐடி ரெய்டு

தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவன இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை, ஈரோடு, கோவை,  சேலம், விருதுநகர் , மதுரை உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் செயல்பட்டு வரும் தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் மொத்தம் 30 இடங்களில் சோதனை நடப்பதாக தெரிகிறது.

சென்னை எழும்பூர், செனாய் நகர், அமைந்தகரை உள்பட 10 இடங்களிலும் ரியல் எஸ்டேட் தொடர்பான அலுவலகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர், செனாய் நகர், அமைந்தகரை உள்பட 10 இடங்களிலும் ரியல் எஸ்டேட் தொடர்பான அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரோடு பெரியார் நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார்கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சி.ஆர்.பி.எப் வீரர்கள் பாதுகாப்புடன் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பாலும் இவர்கள்  அரசின் பணிகளை கான்ட்ராக்ட் எடுத்து  செய்துவருபவர்கள் என்றும்  தெரியவந்துள்ளது.

வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகார்  தொடர்பாக இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக கூறப்பட்டாலும்,  வரும் மக்களவை தேர்தலில் இவர்கள் எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்ற சந்தேகத்தில் அவர்களை முடக்க இந்த சோதனை நடத்தப்படுவதாகவும்  அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!