ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் நேற்று சோதனை நடத்தினர். சென்னை, திருச்சி, கோவை, உள்பட வெளிமாநிலங்களிலும் சுமார் 50 இடங்களில் இந்த சோதனை நடந்தது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் சோதனை நடத்தப்பட்டது.
சென்னையில் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலை, ஆழ்வார்பேட்டை, மற்றும் கர்நாடகா தெலங்கானாவிலும் உள்ள ஜி-ஸ்கொயர் நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஒரே நேரத்தில் அதிக அளவு நிலங்களைக் கையகப்படுத்தியதாகவும், குறைந்த காலக்கட்டத்தில் அதிக வருமானம் ஈடுட்டியதாகவும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் மீதான புகாரின் அடிப்படையில் இந்த வருமான வரிச் சோதனை நடைபெற்றது.
ஜி.ஸ்கொயர் நிறுவனம் திருச்சி கொண்டயம்பேட்டையில் பிளாட் விற்பனை செய்து வருகிறது. அங்கு பிளாட் வாங்கியவர்களில் சிலரை கண்டோன்மெண்ட் ஜி ஸ்கொயர் நிறுவனதிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் திருச்சி கண்டோன்மெண்ட் ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் இன்று காலை 10.30 மணிக்கு 2ம் நாளாக ஐடி அதிகாரிகளி சோதனை மேற்கொண்டனர். நேற்று சோதனை நடத்திய அதே அதிகாரிகள் குழுவினர் தான் இன்றும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.