திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 14.08.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு உதவும் வகையில் அந்தந்த நிலையங்களில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் பிரதீக் தாயள் தெரிவித்துள்ளார்.
