இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா . இவர் குஜராத் மாநிலம் ஜாம்நகர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆவார். இவரும் நகர மேயர் பினா கோத்தாரி மற்றும் எம்.பி. பூனம்பென் மேடம் ஆகியோர் சுதந்திரதினத்தையொட்டி மறைந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது அவர்களுக்குகள் கருத்து மோதல் ஏற்பட்டது. இது குஜராத் மாநிலம் முழுவதும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கு இவர்கள் மூவரும் வந்திருந்தனர். ஜடேஜா மனைவி ரிவாபா, தனது காலணிகளை கழற்றி விட்டு மரியாதை செலுத்தினார். இவரின் இந்த செயலுக்கு எம்.பி. பூனம்பென் மேடம் ரிவாபா ஜடேஜாவிடம், “ஓவர் ஸ்மார்ட்” என்று கூறினார்.
எம்.பி. தன்னை நோக்கி ஆவேசமாக பேசினார் என்றும், தன்னை அதி புத்திசாலி என்றும் கூறினார் என ரிவாபா தெரிவித்தார். “நாங்கள் அங்கு நின்று கொண்டிருந்த போது, பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் கூட நிகழ்ச்சிகளில் காலணிகளை கழற்றாமல் தான் மரியாதை செலுத்துகின்றனர், ஆனால் சிலர் அதிபுத்திசாலித்தனமாக நடந்து கொள்கின்றனர்,” என்று பேசியதாக ரிவாபா கூறி இருக்கிறார்.
“சுதந்திர தினத்தை முன்னிட்டு எம்.பி. உயிர்நீத்த வீரர்களுக்கு தனது காலணிகளை அணிந்த நிலையிலேயே மரியாதை செலுத்தினார். பிறகு, நான் எனது காலணிகளை கழற்றிவிட்டு மரியாதை செலுத்தினேன். மற்ற தலைவர்களும் இதேயை செய்தார்கள்,” என்று ரிவாபா தெரிவித்தார். உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்த வந்த இடத்தில் ஒரே கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் கருத்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் அந்த இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.