Skip to content
Home » தார்சாலையின் ஜல்லியில் டூவீலர் சறுக்கி அரசு டாக்டர் உயிரிழப்பு..

தார்சாலையின் ஜல்லியில் டூவீலர் சறுக்கி அரசு டாக்டர் உயிரிழப்பு..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மேக்கரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரியும் திருவாவடுதுறை ஊராட்சி பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்த சம்சுதீன் மகன் நூருல் ஹக் (50). இவர் நேற்று இரவு குத்தாலத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றுள்ளார். வழியில் மாதிரி மங்கலம் மெயின் ரோடு பகுதியில் தார் சாலையில் உள்ள ஜல்லிகற்களில் சறுக்கி கீழே விழுந்ததில் மருத்துவரின் தலையில் அடிபட்டுள்ளது. மருத்துவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் செல்லும் வழியில் மருத்துவர் நூருல் ஹக் உயிரிழந்ததால் உடல் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு திருப்பி கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக பிணவரையில் வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக குத்தாலம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு மருத்துவர் உயிரிழப்பால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!