Skip to content
Home » ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த திருச்சி நாதக வேட்பாளர் ராஜேஷ்

ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த திருச்சி நாதக வேட்பாளர் ராஜேஷ்

  • by Senthil

திருச்சி தொகுதி  நாம் தமிழர் கட்சி வேட்பாளர்  ஜல்லிக்கட்டு ராஜேஷ். இவர் இன்று  வேட்பு மனுதாக்கல் செய்தார். இதற்காக அவர் இன்று காலை தென்னூர் உழவர் சந்தை மைதானம் அருகே உள்ள ஜல்லிக்கட்டு காளை சிலை அருகே தொண்டர்கள் திரண்டனர். அங்கு ஜல்லிக்கட்டு காளைகளுடன் வந்த  ராஜேஷ், ஜல்லிக்கட்டு காளை சிலைக்கு மாலை அணிவித்தார்.

பின்னர் அங்கிருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக புறப்பட்டார். ஊர்வலத்தில் சாட்டை முருகன், மற்றும்

கட்சியின் நிர்வாகிகள் பெரும் திரளாக பங்கேற்றனர். ஊர்வலத்தின் முன் பகுதியில் வேட்பாளர் ராஜேஷ் வந்தார். தொண்டர்கள் வாழ்த்து கோஷங்களுடன் கலெக்டர் அலுவலகம் அருகே  வந்தனர்.

100 மீ. தூரத்தில் வந்தபோது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். ஜல்லிக்கட்டு காளைகளும் நிறுத்தப்பட்டன. பின்னர் வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் உள்ளே சென்று கலெக்டரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!