Skip to content
Home » ஜெயங்கொண்டம் அருகே கூலித்தொழிலாளியை கொல்ல முயன்ற அண்ணன்-தம்பி கைது…

ஜெயங்கொண்டம் அருகே கூலித்தொழிலாளியை கொல்ல முயன்ற அண்ணன்-தம்பி கைது…

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கடந்த ஆண்டு நடைபெற்ற கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோத தகராறு காரணமாக தற்போது திருவிழாவின் போது பழியை தீர்த்துக் கொள்ள. கூலி தொழிலாளியை சூரி கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த அண்ணன், தம்பியை ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்து கல்லாத்தூர் அருகே தண்டலை மருக்காலங்குறிச்சி கிராமம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சூர்யா (24) கூலி தொழிலாளியான இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் விஜயராகவன் (26) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருவிழா நிகழ்வின் போது ஏற்பட்ட தகராறு முன் விரோதம் காரணமாக தற்பொழுது நடைபெற்ற திருவிழாவின் போது முன் விரோதத்தை மனதில் வைத்த விஜயராகவன். சூர்யாவை பழிதீர்க்க திட்டமிட்டார். திட்டமிட்டபடி சூர்யாவிடம் விஜயராகவன் மற்றும் அவரது சகோதரர் பரமேஸ்வரன் ஆகிய இருவரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளனர். மேலும் விஜயராகவன் தான் மறைத்து வைத்திருந்த சூரி கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்து சூர்யாவை நோக்கி பாய்ந்து ஓங்கி குத்தியுள்ளார். அப்போது சுதாரித்து கொண்ட சூர்யா ஒதுங்கிய போதும் சூரி கத்தி பட்டு காயங்களுடன் மயங்கி கீழே விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து சூர்யா ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விஜயராகவன் (26) மற்றும் அவரது சகோதரர் பரமேஸ்வரன் (21) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருவிழாவின் போது நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் அச்சத்தை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!