Skip to content
Home » நாட்டுதுப்பாக்கி-டூவீலரை போட்டுவிட்டு எஸ்கேப் ஆன மர்ம நபர்… போலீஸ் வலைவீச்சு..

நாட்டுதுப்பாக்கி-டூவீலரை போட்டுவிட்டு எஸ்கேப் ஆன மர்ம நபர்… போலீஸ் வலைவீச்சு..

காவலர்கள் இரவு ரோந்து சென்ற போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவலர்களை பார்த்தவுடன் தனது இருசக்கர வாகனம் மற்றும் நாட்டுத் துப்பாக்கியை போட்டுவிட்டு தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது. இன்று அதிகாலை 3 மணி அளவில் ஜெயங்கொண்டம் போலீசார் அன்பு ராஜ் ஜெயசீலன் ஆகியோர் தேவனூர் கல்வெட்டு பிள்ளையார் கோவில் அருகில் ரோந்து அலுவலில் இருந்த போது தேவனூரில் இருந்து கிழக்கு நோக்கி

அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியுடன் நம்பர் இல்லாத இரு சக்கரவாகனத்தில் வந்து கொண்டிருந்த போது போலீசார் சந்தேகப்பட்டு வாகனத்தை நிறுத்த சொன்ன போது தனது இருசக்கர வாகனத்தையும் நாட்டு துப்பாக்கியையும் அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

நம்பர் இல்லாத இரு சக்கர வாகனத்தையும் நாட்டுத் துப்பாக்கியையும் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் மருந்துப் பொருட்களையும் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டுவந்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம நபரை ஜெயங்கொண்டம் போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!