Skip to content
Home » மாணவிகளிடம் சில்மிஷம்:… அரியலூர் உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது..

மாணவிகளிடம் சில்மிஷம்:… அரியலூர் உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது..

  • by Senthil

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பல்வேறு மாணவிகளுக்கு சில்மிஷம் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த பகுதி நேர உடற்கல்வி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அண்ணா நகரை சேர்ந்த மகாலிங்கம் மகன் கர்ணன் (36) என்பவர் இரவாங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுதி நேர உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அங்கு‌ 8-ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவிகளிடம் கராத்தே பயிற்சி தருவதாக கூறி பல்வேறு மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட மாணவிகள் உடற்கல்வி ஆசிரியரின் சில்மிஷ தொந்தரவு தாங்க முடியாமலும், வெளியில் சொல்ல முடியாமலும் தவித்து வந்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் ஹெல்ப்லைனுக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்தார். பின்னர் இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அப்பள்ளியில் விசாரணை நடத்தி கடந்த 24ஆம் தேதி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கர்ணனை வலைவீசை தேடி வந்தனர். இந்நிலையில் செந்துறை பிரிவு சாலையில் தலைமறைவாக இருந்த கர்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!