Skip to content
Home » உலகின் உயரம் குறைந்த பெண் ஜோதி…… வாக்களித்தார்

உலகின் உயரம் குறைந்த பெண் ஜோதி…… வாக்களித்தார்

  • by Senthil

இந்தியாவில் இன்று  பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் வாக்குப்பதிவுசெய்து வருகின்றனர். இந்நிலையில், உலகின் மிகவும் உயரம் குறைவான பெண்ணாக அறியப்படும் ஜோதி ஆம்கே நாக்பூரில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று வாக்களித்தார்.

2009-ம் ஆண்டில், ஜோதி ஆம்கேக்கு உலகின் ‘உயரம் குறைந்த பதின்ம வயதுப் பெண்’ என்ற பட்டம் வழங்கப்பட்டது. அப்போது 15 வயதான ஜோதி ஆம்கேவின் உயரம் 2 அடி 0.3அங்குலமாக இருந்தது. தற்போது, ஜோதிக்கு 30 வயதாகிறது.  உடல் ரீதியாக நன்றாக இருக்கும் பலர் வாக்குச்சாவடிக்கு வராத நிலையில்  2 அடி  உயரமே உள்ள  ஜோதி  வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையாற்றி  மக்கள் மத்தியில் உயர்ந்து நிற்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!