Skip to content
Home » டில்லி மகளிர் ஆணையம் கூண்டோடு காலி…..கவர்னர் சக்சேனா அதிரடி

டில்லி மகளிர் ஆணையம் கூண்டோடு காலி…..கவர்னர் சக்சேனா அதிரடி

 டில்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கும் தொடர் மோதல் நிலவிவரும் வேளையில், ஆளுநரின் அதிரடி உத்தரவு வெளிவந்துள்ளதுடில்லி  மகளிர் ஆணையத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடைப்படையில் ஏற்கனவே விசாரணை நடந்துவந்தது. விசாரணை முடிவுகளின்படி, 40 பணியாளர்களே நியமிக்க சட்டம் இருக்கும் நிலையில், முறைகேடாக 223 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளதாகவும், கவர்னரின் ஒப்புதலின்றி நியமிக்கப்பட்ட இந்த பணியிடங்கள் ரத்து செய்யப்படுகிறது என்றும் ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க டில்லி மகளிர் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை என்றும் ஆளுநரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!