அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஒப்புதல் தந்தார்.இந்த நிலையில் ஆட்கொணர்வு மனுவை விசாரிக்க இருந்த சென்னை ஐகோர்ட் நீதிபதி சக்திவேல், அந்த வழக்கில் இருந்து திடீரென விலகினார். நீதிபதி சக்திவேல் கரூரை சேர்ந்தவர் என்பதால் இந்த வழக்கில் இருந்து விலகியதாக தெரிகிறது. அவருக்கு பதில் வேறு நீதிபதியை தலைமை நீதிபதி நியமிப்பார். அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெறும்.