தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவினர் கச்சத்தீவு பிரச்னையை கிளப்பினர். இதன் மூலம் தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும் என கருதினர். ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்க பிரதமர் எடுத்த நடவைடிக்கை என்ன, ஒரு முறையாவது இதுபற்றி பேசினீர்களா என கேள்வி எழுப்பினார். அதன் பிறகு பாஜகவினர் கச்சத்தீவு பிரச்னையை ஏன் எழுப்பினோம் என்ற நிலைக்கு போய்விட்டனர்.
அத்துடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரைவிட்டு பேட்டி அளிக்க விட்டனர். அவா் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார், இந்த நிலையில் இலங்கை கடற் தொழில் மந்திரி டக்ளஸ் தேவானந்தா, கச்சத்தீவை தரமுடியாது. இது ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டது என திட்டவட்டமாக கூறிவிட்டார். இதற்கு இந்தியா தரப்பில் என்ன பதில் அளிக்கப்போகிறார்கள் என தெரியவில்லை.