Skip to content
Home » கலாஷேத்ரா விவகாரம்… மாணவிகள் வாக்குமூலத்தில் பகீர் தகவல்…. திருப்பம்

கலாஷேத்ரா விவகாரம்… மாணவிகள் வாக்குமூலத்தில் பகீர் தகவல்…. திருப்பம்

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் ருக்மணி தேவி நுண்கலைக் கல்லூரியின் பேராசிரியர்கள் நான்கு பேர் மீது பாலியல் குற்றசாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து அடையாறு காவல் நிலையத்தில் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கலாஷேத்ரா உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

முன்னதாக மாநில மகளிர் ஆணையம் இதனை விசாரித்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தது. அதனை தொடர்ந்து மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது. இதற்கிடையே காவல்துறைக்கு அறிக்கை சமர்ப்பித்த மகளிர் ஆணையம் கலாஷேத்ராயில் இருந்து 162 மாணவிகளிடம் விசாரிக்க பரிந்துரை செய்தது.

அதன்பேரில் போலீசார் கடந்த இரண்டு வாரங்களாக நடத்திய விசாரணையில் 10 க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆஜராகியுள்ளனர். அதில் பெரும்பாலான மாணவிகள் ‘ கல்லூரி மீதும் ஆசிரியர்கள் மீதும் எவ்வித குற்றச்சாட்டையும் வைக்கவில்லை’ என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கலாஷேத்ரா ஆசிரியர்கள் தங்கள் மீது அன்பாக இருப்பார்கள் அவர்கள் மீது எங்களுக்கு மரியாதை உள்ளது என்றும் கூறினார்களாம். ஒரு சில மாணவிகள் ‘ எங்களுக்கும் இந்த புகாருக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அண்மையில், பாலியல் வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது திட்டமிட்டு பழி சுமத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி திவ்யா பத்மன் பகீர் கிளப்பினார் . இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் அவர் கொடுத்துள்ள புகாரில் ‘கலாஷேத்ராவின் பேராசிரியைகள் நிர்மலா நாகராஜன் மற்றும் நந்தினி நாகராஜன் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் எனது கணவர் மீது மாணவிகள் பொய் புகார் கொடுத்துள்ளதாக கூறியிருந்தார்.

மேலும், எனது கணவரை பேராசிரியைகள் நிர்மலா நாகராஜன் மற்றும் நந்தினி நாகராஜனுக்கு பிடிக்கவில்லை.. இதனால் அவர் மீது இருவரும் பொறாமையில் இருந்துள்ளனர்.. எப்படியாவது அவரை கல்லூரியைவிட்டு வெளியே அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அதன்படி மாணவிகளை தூண்டிவிட்டு பொய் புகார் கொடுத்ததாக அதில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!