Skip to content
Home » கலாஷேத்ராவில் நடந்தது என்ன?…30 மாணவிகளிடம் இன்று விசாரணை…

கலாஷேத்ராவில் நடந்தது என்ன?…30 மாணவிகளிடம் இன்று விசாரணை…

  • by Senthil

சென்னை கலாஷேத்ரா மையத்தில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாக மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் பேராசிரியர் ஹரிபத்மன் கைது செய்யப்பட்டார். நேற்று கலாஷேத்ரா கல்லூரியில் மாநில மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் 4 பேர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். கல்லூரி இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குனர் பத்மாவதி, முதல்வர் பகல ராம்தாஸ் ஆகியோரிடம் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இன்று 2வது நாள் விசாரணை நடந்தது. இன்று தேர்வு நடைபெற்ற நிலையில், தேர்வு முடிந்து 2 மாதங்களுக்கு பிறகே மாணவிகள் கல்லூரிக்கு திரும்புவர் என்பதால் இன்றே விசாரணை நடத்தப்பட்டது. இன்று 30 மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. மாணவிகள் சுதந்திரமாக புகார்களை ஆணையத்திடம் தெரிவிக்கும் வகையில், கல்லூரி நிர்வாகத்தின் தலையீடு இல்லாமல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் இறுதி அறிக்கை விரைவில் மாநில மனித உரிமை ஆணையத்திடம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!