Skip to content
Home » காமராஜர் பிறந்தநாள்…. காங்., கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்…

காமராஜர் பிறந்தநாள்…. காங்., கட்சியினர் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்…

  • by Senthil

கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையம் முன்பு வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா மாநில பொதுக்குழு உறுப்பினர் இன்ஜினியர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.

குளித்தலை வட்டார காங்கிரஸ் தலைவர் சித.ஆறுமுகம் வரவேற்புரை ஆற்றினார். மாநில விவசாய அணி செயலாளர் வளையப்பட்டி வெங்கடாசலம் கொடி ஏற்றி வைத்தும், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜமாணிக்கம் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார்.

காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் அவரின் சிறப்புகளை எடுத்துரைத்தும், பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி செயலாளர் மணிமேகலை, மாவட்டச் செயலாளர் சேட்டு என்கிற சந்தானம், குளித்தலை சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராம்குமார், சட்டமன்ற மாணவர் காங்கிரஸ் தலைவர் மதன்குமார், மருதூர் நகர தலைவர் எஸ்பி மருதை, குளித்தலைநகரம் பொருளாளர் சிவக்குமார் நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் அரிகிருஷ்ணன் நாங்க வரம் நகர தலைவர் அண்ணாவி குழுத்தலை வட்டார பொதுச் செயலாளர்கள் பாலச்சந்தர், என் ஆர் சந்திரசேகரன், மாட்டாரா துணைத் தலைவர்கள்கோவிந்தன், கோபால்,

மாரிமுத்து, கணேசன், வரதராஜன், வட்டார ஓ பி சி தலைவர் முத்துரத்தினம், வட்டார பொதுச்செயலாளர் கோவிந்தன், மாவட்ட பிரதிநிதி சேது, நங்கவரம் பொதுச்செயலாளர் தர்மன் பொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஐ என் டி யு சி வட்டாரத் தலைவர் ஏட்டு ராஜா, நகர ஓபிசி பிரிவு தலைவர் சுரேஷ், நகரத் துணைத் தலைவர் ரத்தினகிரி வட்டார பொருளாளர் அரிகிருஷ்ணன் வட்டார மகளிர் அணி தலைவர் கலைச்செல்வி நகர துணை தலைவர் சோடா செந்தில் தகவல் உரிமை ஆணைய வட்டார தலைவர் தங்கராஜ், நச்சலூர் ராஜ்குமார் உள்ளிட்ட நகரக் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!