Skip to content
Home » கஞ்சா குடிப்பதை தட்டி கேட்ட நபர் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு…

கஞ்சா குடிப்பதை தட்டி கேட்ட நபர் வீட்டின் முன்பு நாட்டு வெடிகுண்டு வீச்சு…

சென்னை புது வண்ணாரப்பேட்டை தேசிய நகர் 6 தெருவில் வசிப்பவர் சிவா (34). சமையல் வேலை செய்து வரும் இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் சிலர் இவரது வீட்டின் முன்பு அமர்ந்து கஞ்சா புகைத்துக் கொண்டு அசிங்கமாக பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சத்தம் கேட்டு வெளியே வந்த சிவா அவர்களிடம் பெண்கள் இருக்கும் பகுதியில் இப்படி கஞ்சா அடித்து கொண்டு சத்தம் போடலாமா எனக் கேட்டுள்ளார்.‌ இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் சிவாவிடம் தகராறில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனால் பயந்து போன சிவா வீட்டினுள் சென்று கதவைச் சாத்திக்கொண்டார்.பின்னர் அந்த கும்பல் பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி தீவைத்து வீட்டின் கதவு மீது வீசியதுடன் அசிங்கமாக பேசி, கத்தியுடன் ரகளை செய்தனர். அப்போது வெடிச்சத்தம் கேட்டு சிவா மற்றும் அக்கம்பக்கத்தினர் ஒடி வெளியே வந்து பார்த்த போது அந்த கும்பல் பைக்கில் தப்பிச் சென்றது.

இதுகுறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சிவா தகவல் அளித்தார். இதன் பேரில் வண்ணாரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.‌ இச்சம்பம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒருவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், புது வண்ணாராப்பேட்டையை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி மனோஜ்குமார் என்ற மாயாண்டி(20) என்பது தெரிய வந்தது.

இவர் தனது சக கூட்டாளிகளான கிச்சா என்ற பிரவீன், சூர்யா என்ற ஜுட் ஆகியோருடன் சேர்ந்து சிவா வீட்டின் முன்பு கஞ்சா புகைத்தது தெரியவந்தது. சிவா இதனைத் தட்டிக்கேட்டதால் மூன்று பேரும் சேர்ந்து அவரது வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.‌ இதனைத் தொடர்ந்து போலீஸார் தலைமறைவாக உள்ள கிச்சா, சூர்யா ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர். கஞ்சா குடிப்பதைத் தட்டிக் கேட்டவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!