Skip to content
Home » கஞ்சா போதையில் தண்டவாளத்தில் உருண்ட ஐடிஐ மாணவர்கள்….

கஞ்சா போதையில் தண்டவாளத்தில் உருண்ட ஐடிஐ மாணவர்கள்….

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ரயில்வே நிலையத்தில் நேற்று மாலை 5:30 மணி அளவில் ஏராளமான பயணிகள் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது நடைமேடை எண் ஐந்துக்கு வந்த இரண்டு ஐடிஐ மாணவர்கள் கஞ்சா போதையில் தண்டவாளத்தைக் கடக்க முடியாமல் தடுமாறினர்.

அப்போது போதையில் மாணவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் உருண்டு புரண்ட சம்பவத்தால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அரக்கோணம் ரயில் நிலையம்

அதில் ஒரு மாணவர் அங்கு செல்லவிருந்த சரக்கு ரயிலுக்கு அடியில் சென்று படுத்துக்கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள், அவர்களை மீட்டு நடைமேடைக்கு அழைத்து வந்தனர். நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் ரயில் எதுவும் வராததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களைக் கண்டித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவதால் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!