கர்நாடகாவில் மக்களவை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. அங்கு முதல் கட்ட வாக்குப்பதிவு வரும் 26ம் தேதி நடக்கிறது. ஆனால் கர்நாடக மாநிலத்தில் இந்த முறை அதிமுக போட்டியி்டவில்லை. அதே நேரத்தில் வேறு கட்சிகளுக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை இதை கண்டித்து கர்நாடகா மாநில அ.தி.மு.க. செயலாளர் எஸ்.டி.குமார் அந்த கட்சியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படாததால் அதிருப்தியில் ராஜினாமா செய்த எஸ்.டி. குமார் கூறியதாவது:
கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கவில்லை. தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் மாநில செயலாளர் பதவியில் இருந்து விலகிக்கொண்டேன். யாரை ஆதரித்து பிரசாரம் செய்வதென்று தெரியாமல் கர்நாடகா அ.தி.மு.க.வினர் குழப்பத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.