Skip to content
Home » கரூர் மணமகளுக்கும் துருக்கி இளைஞருக்கும் தமிழ் முறைப்படி திருமணம்..

கரூர் மணமகளுக்கும் துருக்கி இளைஞருக்கும் தமிழ் முறைப்படி திருமணம்..

கரூர்  பெண் இன்ஜினீயர்,  துருக்கி வாலிபருடன்  தமிழ் முறைப்படி திருமணம். கரூரில்  இன்று விமரிசையாக நடந்தது.

கரூர் மாநகராட்சி பசுபதிபாளையத்தை சார்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் பிரியங்கா. பி.டெக் பட்டதாரியான இவர் டில்லியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  டில்லியில்  துருக்கி நாட்டை சார்ந்த எம்.டெக் பட்டதாரி இளைஞரான அஹமத் கெமில் கயான்  என்பவருக்கும் காதல்  ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து

இருவரும் அவர்களது திருமணம் குறித்து இரு வீட்டாரிடமும் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டு இன்று பசுபதிபாளையம் மணமகள் வீட்டில் எளிமையாக தமிழ் முறைப்படி  திருமணம் நடைபெற்றது. மாப்பிள்ளை அழைப்பு, தாலி கட்டுதல், கன்னி தானம் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றது. தமிழ் தெரியாத மாப்பிள்ளை வீட்டாருக்கு ஆங்கிலத்தில் ஒவ்வொரு நிகழ்வும் விளக்கப்பட்டு நடைபெற்றது. இதனை துருக்கியில் இருந்து வந்த அவர்களது உறவினர்கள் ஆர்ச்சரியத்துடன் பார்த்ததுடன், வீடியோவில் பதிவு செய்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!