Skip to content
Home » நாளை ஓய்வு பெற இருந்தார்……….கரூர் மாநகராட்சி ஊழியர் தீயில் கருகி பலி

நாளை ஓய்வு பெற இருந்தார்……….கரூர் மாநகராட்சி ஊழியர் தீயில் கருகி பலி

  • by Senthil

கரூர் மாவட்டம் சின்னத்தாராபுரம் அருகே உள்ள  டி. வெங்கடாபுரம் பகுதியில் வசிப்பவர் மணிமாறன். இவர் கரூர் மாநகராட்சி குடிநீர் வ ழங்கும் துறையில்  பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் தனது காட்டிற்கு  நேற்று காலை   சென்றார்.   தரிசு நிலத்தில் உள்ள புற்களை அகற்றுவதற்காக  வயலில் தீ வைத்தார்.

சுற்றிலும்  தீ பரவியதால் உள்ளே சென்ற மணிமாறன் வெளியே வர முடியாமல் தீ வளையத்திற்குள் மாட்டிக் கொண்டார். அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்தபொழுது உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு சம்பவம் இடத்திலேயே அவர்  இறந்து கிடந்தார். பின்னர் சின்ன தாராபுரம் காவல் துறைக்கு  தகவல் தெரிவித்தனர்.  உடல் கூறு ஆய்வுக்காக  மணிமாறன் சடலம் அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  மணிமாறன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில்  தனது சொந்த தோட்டத்தில்  வைத்த நெருப்பில் சிக்கி  பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!