கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகலூர், தளவாபாளையம்,அரவக்குறிச்சி, தென்னிலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென இரவு மிதமான மழை பெய்ய தொடங்கியது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வீடுகளில்
குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வேலாயுதம்பாளையம் பகுதியில் மழையின் காரணமாக சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வேலைமுடிந்து வீடு திரும்பும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.