Skip to content

கரூர் சம்பவம்-காயமடைந்த 6 பேரிடம் சிபிஐ 8 மணி நேரம் விசாரணை

  • by Authour

கரூர் சிபிஐ அலுவலகத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த 6 நபர்கள் இன்று விசாரணைக்காக ஆஜரான நிலையில், 8 மணி நேர விசாரணை முடிந்து புறப்பட்டு சென்றனர்.

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள், வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர், ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் தவெக பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு காயமடைந்த 5 நபர்களிடம் நேற்று சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக காலை கூட்ட நெரிசலில் காயம் அடைந்த மூன்று நபர்கள் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர் அதனை தொடர்ந்து மதியம் 3 மணிக்கு மேல் 3 நபர்கள் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகினர்.

சிபிஐ அதிகாரிகள் இன்று மட்டும் 6 நபர்களிடம் 8 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற விசாரணை முடிந்து காயம் அடைந்த நபர்கள் புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சம்பவத்தில் காயமடைந்த மேலும் பலருக்கு சம்மன் அனுப்பி அவர்கள் மூலம் விபரங்களை சேகரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

error: Content is protected !!