கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதற்காக அவர் இன்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான தங்கவேலிடம் அவர் வேட்புமன தாக்கல் செய்தார். பின்னர் அதிகாரி முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
ஜோதிமணி வேட்பு மனுவை தாக்கல் செய்யும்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் கரூர் பாராளுமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் எம்.பி அப்துல்லா,, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி தொண்டர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.