Skip to content
Home » கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா…

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் ராகு கேது பெயர்ச்சி விழா…

இன்று வாக்கிய பஞ்சாங்கம் படி ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆவதை ஒட்டி நவக்கிரக சுவாமிகளுக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், குங்குமம் அபிஷேக பொடி, பன்னீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து ராகு பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, கேது பகவானுக்கும் பட்டாடை உடுத்தி, மாலைகள் உள்ளிட்ட அலங்காரங்கள் நடைபெற்றது தொடர்ச்சியாக 03.40

மணியளவில் ராகு பகவானுக்கும், கேது பகவானுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் கூறியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் இன்று ராகு கேது பெயர்ச்சி விழாவை முன்னிட்டு பரிகார ராசிகளான மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சகம், கும்பம், மீனம் உள்ளிட்ட ராசி சேர்ந்த ஆன்மீக பக்தர்கள் ஆலயத்தில் அர்ச்சனை செய்து தங்களது வழிபாடை நடத்தினர்.

நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!