Skip to content
Home » கரூரில் நூற்றுக்கணக்கான குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்… பணிகள் முடக்கம்….

கரூரில் நூற்றுக்கணக்கான குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்… பணிகள் முடக்கம்….

கரூர் மாவட்டத்தில் குவாரி மற்றும் கிரசர் தொழிலில் சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஏற்படுத்தும் இடையூறு மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குனர் தமிழகத்தில் உள்ள அனைத்து குவாரிகளையும் முடக்கும் நோக்கத்தோடு பல இடையூறுகள் செய்து வருவதாகவும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி வெளி மாவட்ட அதிகாரிகளைக் கொண்டு ஆய்வில் ஈடுபட்டு அபராதம் விதித்து வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் காரணமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக கரூர் மாவட்ட குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் சங்கம் சார்பாக 100-க்கும் மேற்பட்ட குவாரி உரிமையாளர்கள் கடந்த 22-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக, கரூர் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட குவாரி மற்றும் கிரசர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கட்டுமான பொருட்கள் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுமான தொழில்

அனைத்தும் பாதித்துள்ளது. இதை சார்ந்த தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு இன்றி வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு கட்டுமான பொருட்கள் தடை இன்றி கிடைக்க ஏற்பாடு செய்து தரவேண்டும் என பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா அமைப்பின் கரூர் மாவட்ட தலைவர் ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் க.பரமத்தி பகுதியில் உள்ள நூறுக்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்காமல் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!