Skip to content
Home » கரூரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை…

கரூரில் லஞ்சம் பெற்ற மின்வாரிய வணிக ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை…

கரூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சார்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர் கடந்த 31.10.2008 ஆண்டு தனது பெயரில் உள்ள சுமார் 2.5 ஏக்கர் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு பெறுவதற்காக மாயனூரில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று மின் இணைப்பிற்கு பதிவு செய்துள்ளார் அதற்காக 25.03.2010 அன்று அதே அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பெரியசாமி என்பவரிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் வழங்கி உள்ளார்.

மேலும் விண்ணப்பத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வணிக ஆய்வாளர் பெரியசாமி ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாமல் முத்துக்கிருஷ்ணன் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் தெரிவித்துள்ளார் புகாரின் பேரில் பெரியசாமி லஞ்சம் பெறும்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து அவரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

இதனை தொடர்ந்து இவ்வளக்கு இன்று விசாரணைக்கு வந்தது லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக வணிக ஆய்வாளர் பெரியசாமி என்பவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் ஏக காலத்தில் அனுபவிக்குமாறு தீர்ப்பு வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!