Skip to content
Home » கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா… பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்…

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா… பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்…

தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற ஆலயங்களில் ஒன்றான கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா கடந்த 14 ஆம்தேதி கம்பம் நடுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் கோவில் பரம்பரை அறங்காவலருக்கு அசரீரியாக அம்மன் வாக்கு கூறியதையடுத்து மூன்று கிளையுடைய வேப்பம் கம்பினை பாலம்மாள்புரத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கோவில் நட்டு வைத்தனர். பின்னர் கம்பத்திற்கு மஞ்சள் தேய்த்து, வேப்பிலை சூட்டி அலங்கரித்து வைக்கப்பட்டது. இந்த கம்பத்திற்கு பக்தர்கள் தினமும் புனித நீரை எடுத்து வந்து குடம், குடமாக ஊற்றி வழிபட்டனர்.

நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வரும் நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான இன்று அமராவதி ஆற்றங்கரையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி எடுத்தல், அலகு குத்துததல்,

காவடி எடுத்து ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றில் விடுதல் நிகழ்ச்சி வரும் 31 ஆம் தேதி நடைபெற உள்ளது முன்னதாக இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது இதில் ஏராளம் பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வரத்தினை பிடித்துக் கொண்டு நான்கு முக்கிய வீதிகளிலும் உலா வந்தனர் இதனை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பக்தி பரவசத்தில் கண்டு களித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!