Skip to content
Home » கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் புகை கக்கும் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு…

கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் புகை கக்கும் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு…

கரூரில் பூஜ்ஜிய உமிழ்வு நாளை முன்னிட்டு கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் புகை கக்கும் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு – சுற்றுச்சுவருக்கு வெளியே வரிசை கட்டி நின்ற கார்கள்.

பூஜ்ஜிய உமிழ்வு நாள் என்பது கார்பன் உமிழ்வை குறைப்பதற்கும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில்
பங்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கழிவுகளை குறைத்தல், பொருட்களை மறு பயன்பாடு செய்தல், மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல், ஆற்றல் திறனுள்ள உபகரணங்களை பயன்படுத்துதல்,

சூரிய அல்லது காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுதல், காலநிலை மாற்றத்தை தணிக்க, மக்கள் தங்கள் பங்களிப்பை செலுத்த, இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த உலக பூஜ்ஜிய உமிழ்வு தினத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், ஊழியர்கள், மருத்துவ மாணவர்கள் அனைவரும் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்கள் பயன்படுத்தாமல் இன்று ஒரு நாள் மட்டும் மின்சார

வாகனம், மிதிவண்டிகள் பயன்படுத்த மருத்துவக் கல்லூரி முதல்வர் அறிவுறுத்தி இருந்தார். ஆனால்,கல்லூரி முதல்வர் அறிவுறுத்தலை கடைபிடிக்காமல் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் காரில் வந்ததால் வாகனங்கள் கேட்டிற்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் அந்த வாகனங்கள் சுற்றுச்சுவருக்கு வெளியே வரிசைகட்டி நிறுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!