Skip to content
Home » கரூரில் சாலை ஓரத்தில் விற்பனை செய்த வியாபாரிகள்…. போக்குவரத்து பாதிப்பு….

கரூரில் சாலை ஓரத்தில் விற்பனை செய்த வியாபாரிகள்…. போக்குவரத்து பாதிப்பு….

  • by Senthil

கரூர் மாநகர் பகுதி திருச்சி செல்லும் சாலையில் உள்ள உழவர் சந்தை தற்போது பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளது, இங்கு விற்பனைக்கு வரும் வியாபாரிகள் 20 ஆம் தேதி வரை செயல்படாது என அறிவிப்பு வைக்கப்பட்டு உள்ளது,அதற்கு மாறாக உழவர் சந்தை நிர்வாகம் வெங்கமேடு பகுதியில் உள்ள குளத்துப்பாளையம் உழவர் சந்தையில் வியாபாரிகள் விற்பனை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று உழவர் சந்தை நிர்வாகம் ஒரு அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டது. ஆனால்

வியாபாரிகள் அங்கு செல்ல மறுப்பு தெரிவித்து கரூர்- திருச்சி சாலை ஓரங்களில் கடைகள் அமைத்து விற்பனையை செய்து வருகின்றனர். கூட்ட நெரிச்சலாக விற்பனை செய்யும் வியாபாரிகள் பொதுமக்கள் மற்றும்சிறு கடை வியாபாரிகள் என பலரும் வந்து காய் உள்ளிட்ட கீரை வகைகள் வாங்கி செல்கின்றனர். இதனால்கூட்ட நெரிச்சல் ஏற்பட்ட சாலையில் செல்லும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. அப்பகுதியில் போக்குவரத்து ஊர்ந்து செல்லும் வகையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!