Skip to content
Home » கரூரில் திடீரென பயங்கர சத்தம் …. வானத்தில் தோன்றிய ஔிவட்டம்.. பரபரப்பு..

கரூரில் திடீரென பயங்கர சத்தம் …. வானத்தில் தோன்றிய ஔிவட்டம்.. பரபரப்பு..

கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வானில் விட்டுவிட்டு ஒலித்த மர்ம சத்தத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். கரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் குறிப்பாக தாந்தோணிமலை, ராயனூர், வெங்ககல்பட்டி, சின்னாண்டாங் கோவில், ஆகிய பகுதிகளில் காலை 10.30 மணியளவில் திடீரென வானில் இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. சுமார் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை விட்டுவிட்டு அந்த மர்ம சத்தம் 2 முறை

கேட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். தாந்தோணிமலை பகுதியில் வானத்தில் வெள்ளை நிறத்தில் ஒளிவட்டம் ஒன்று தென்பட்டது. ஆனால், அந்த சத்தம் ஏதோ ஜெட் விமானம் செல்வதுபோல்

இருந்தாலும், பொதுமக்கள் கண்களுக்கு எதுவும் தென்படவில்லை என கூறப்படுகிறது.  கரூர் மாநகர பகுதியில் பகல் நேரத்தில் வானத்தில் பயங்கர சத்தத்துடன் வெள்ளை நிறத்தில் வட்டம் காணப்படுகிறது இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!