Skip to content
Home » கரூரில் டெங்கு கொசுவை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி..

கரூரில் டெங்கு கொசுவை ஒழிப்பது குறித்து விழிப்புணர்வு பேரணி..

  • by Senthil

கரூர் அரசு கலைக் கல்லூரி் சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தொடங்கி வைத்தார். தான்தோன்றிமலையில் உள்ள கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி, இந்த பேரணி மில்கேட் வரை சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தை அடைந்தது.

பேரணியில் கலந்து கொண்ட சுமார் 200க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் டெங்கு நோய் பரப்பும் கொசுக்களை ஒழிப்பது குறித்த முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர். மேலும், சுற்றுப்புற தூய்மையை காப்போம் நோய் பரப்புவதை தவிர்ப்போம் என்ற முழக்கங்களையும் அவர்கள் வலியுறுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!