Skip to content
Home » கரூரில் உச்சத்தை தொட்ட தக்காளி விலை….100 ரூபாயை கடந்து சதமடித்தது…

கரூரில் உச்சத்தை தொட்ட தக்காளி விலை….100 ரூபாயை கடந்து சதமடித்தது…

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. சென்னை, மும்பை, டெல்லி என முக்கிய இடங்களில் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியதால் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு தக்காளி வரத்து குறைவு ஏற்பட்டது. விலை உயர்வுக்கு இது முக்கிய காரணியாக இருந்தது.

இந்த நிலையில் கரூர் மாநகரக்குட்பட்ட உழவர் சந்தையில் தக்காளி முதல் தரம் 98 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் 90 ரூபாய்க்கும் விற்பனையானது. இதே போல் சில்லறை விற்பனை கடைகளில் தக்காளியின் விலை 100 ரூபாயை கடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கரூர் உழவர் சந்தையில் நேற்று 80 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி திடீரென 98 ரூபாய்க்கு விற்பனையானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தக்காளியின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கடந்த முறை விலை ஏற்றம் கண்டபோது கூட்டுறவு அங்காடிகளில் குறைவான விலைக்கு தக்காளியை விற்பனை செய்தது போல, இந்த முறையும் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!