Skip to content
Home » காஷ்மீர்…2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீர்…2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில்  பூஞ்ச் செக்டாரில் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்துக்குரிய வகையில்  பயங்கரவாதிகள நடமாட்டம் இருப்பதாக வந்த ரகசிய தகவலின்படி, இந்திய ராணுவம் காஷ்மீர் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  அப்போது 2 சிறிய குழு ஊடுருவல் தடுக்கப்பட்டதாகவும், ஒரு பெரிய குழு ஊடுருவல் முறியடிக்கப்பட்டதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஊடுருவல் முயற்சியின் போது 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் தேடுதல் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையே பயங்கரவாதிகளுக்கு உதவியதாக 3 ஊழியர்களை காஷ்மீர் அரசு வேலையில் இருந்து நீக்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!