Skip to content
Home » காஷ்மீர்…2 இடத்தில் என்கவுன்டர்…. பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீர்…2 இடத்தில் என்கவுன்டர்…. பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டத்தில் கர்ஹாம குன்ஜர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த உளவு தகவலை தொடர்ந்து, காஷ்மீர் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.  பின்னர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில், பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும், படையினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

இந்த மோதலில், பயங்கரவாதி ஒருவர் சுட்டு கொல்லப்பட்டார். இதனை அடுத்து, அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.  காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நேற்று நடந்த என்கவுண்ட்டரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். இதனை தொடர்ந்து ரஜோரி மாவட்டத்தின் கந்தி வன பகுதியில் மற்றொரு என்கவுன்ட்டர் நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!