மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இண்டியா கூட்டணி சார்பில் நேற்று டெல்லி ராம் லீலா மைதானத்தில் போராட்டம் நடைபெற்றது.
இதில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா, உத்தவ் தாக்கரே, மெகபூபா முப்தி, ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் ஸ்டாலினின் அறிக்கையை சிவா எம்.பி. படித்தார்.
# இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மின் தடை இருக்காது. 24 மணி நேரமும் மின்சாரம் விநியோகிக்கப்படும்.
# நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச மின்சாரம்.
# அனைத்து பகுதிகளிலும் அரசு பள்ளிகளை உருவாக்கி, பணக்காரர்களுக்கு கிடைக்கும் தரமான கல்வி ஏழைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்வோம்.
# ஒவ்வொரு கிராமங்களிலும் மருத்துவமனைகளை உருவாக்கு வோம். அனைவருக்கும் முறையான இலவச சிகிச்சை கிடைக்க ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்குவோம்.
#எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கைபடி, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அளிப்போம்.
# டெல்லிக்கு மாநில அந்தஸ்தை வழங்குவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.