Skip to content
Home » கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை கலெக்டர் ஆய்வு…

கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை கலெக்டர் ஆய்வு…

  • by Senthil

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம் மாதவ பெருமாள் கோயில் மற்றும் இலால்குடி வட்டம் தாளக்குடி கிராமங்களில் நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்டத்திற்குட்பட்ட கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரியை மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, இலால்குடி வருவாய் கோட்டாட்சியர்

வைத்தியநாதன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலன், நீர்வளத்துறை கனிமம் மற்றும் கண்காணிப்பு கோட்ட செயற்பொறியாளர் பவளக்கண்ணன், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி இயக்குநர் சுரங்கம் மற்றும் புவியியல் துறை பாலமுருகன், வட்டாட்சியர்கள் சக்திவேல் முருகன், சிஸிலினா சுகந்தி உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள், காவல் துறையினர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!