Skip to content
Home » கோவையில் +1 பொதுத்தேர்வு எழுதும் 34, 390 மாணவர்கள்….

கோவையில் +1 பொதுத்தேர்வு எழுதும் 34, 390 மாணவர்கள்….

  • by Senthil

11ம் வகுப்பு பொதுத் தேர்வு – கோவையில் 34,390 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாட்டில் 11ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் துவங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெறுகிறது.முதல் நாளான இன்று  மொழித்தேர்வு நடைபெறுகிறது. அதன்படி கோவை மாவட்டத்தில் மொத்தம் 128 தேர்வு மையங்களில் 11ம் வகுப்பு

தேர்வு நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் 362 பள்ளிகளை சேர்ந்த 15,630 மாணவர்கள், 18,754 மாணவிகள் என மொத்தம் 34,390 மாணவ மாணவிகள் தேர்வெழுதுகின்றனர். மேலும் கண்காணிப்பிற்காக 175 பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!