Skip to content
Home » கோவை மாநகராட்சி கமிஷனருக்கு பாசிமணி மாலை….

கோவை மாநகராட்சி கமிஷனருக்கு பாசிமணி மாலை….

  • by Senthil

கோவை மாநகராட்சி துடியலூர் புது முத்துநகர் நரிக்குறவர் காலனியில் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் 60 நரிக்குறவர் மக்கள் வசிக்கும் பகுதியில் மின்சார வசதி மற்றும் பொது குடிநீர் குழாய் பற்றாக்குறையால் நாள்தோறும் அல்லல் பட்டு வருவதை மாநகராட்சி மாமன்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் மாண்புமிகு மேயர் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் அவர்களிடம் அளித்த புகாரின் பேரில் ஆணையாளர் அவர்கள் நேரில் வந்து நரிக்குறவர் மக்களின் துயரங்களை நேரில் கண்டறிந்து உடனடியாக தெருவிளக்கு மற்றும் பொது குடிநீர் குழாய் அமைத்துத் தருவதற்கு இடப்பட்ட உத்தரவின் பேரில் துடியலூர் புது முத்து நகர் நரிக்குறவர் காலனிக்கு பகுதியில் இன்று அப்பகுதி மக்களுக்கு தெருவிளக்கு பொது குடிநீர் குழாய்

கிடைத்துள்ளது. 30 ஆண்டுகளாக அல்லல்பட்டு வந்த மக்களுக்கு கோவை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளரால் தீர்வு கிடைத்துள்ளது கோவை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் அவர்களுக்கு நரிக்குறவர் சமூக மக்களின் சார்பில் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நரிக்குறவர் மக்களின் பாரம்பரிய மரியாதையுடன் பாசிமணி மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர், உடன் சமூகநீதிக் கட்சி தலைவர் பன்னீர்செல்வம் பொதுச் செயலாளர் வெள்ளை மடை நாகராஜ் துணை பொதுச்செயலாளர் தளபதி செந்தில் சமூகநீதி தொழிற்சங்க தலைவர் ஜெயபால் முருகவேல் சமூகநீதி நரிக்குறவர் சங்கத்தின் தலைவர் சத்திய குமார் உள்ளிட்டோர் பொதுமக்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!