Skip to content
Home » கோவை கோர்ட்டில் கொலை…. மேலும் 5 பேர் கைது….

கோவை கோர்ட்டில் கொலை…. மேலும் 5 பேர் கைது….

  • by Senthil

நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் நடைபெற்ற கோகுல் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை கொடுத்தது மற்றும் குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்தது என்ற அடிப்படையில் கோவை மாநகர தனிப்படை போலீசார் ஐந்து பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கொலையில் நேரடியாக தொடர்புடைய ஏழு பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள நிலையில் தற்போது மீண்டும் தொடர்புடையவர்கள் என ஐந்து பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தமாக 12 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!