கோவை, மேட்டுப்பாளையம் சாலை எப்போதும் போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலையாகவே காணப்படுகிறது. இந்நிலையில் துடியலூர் இருந்து கோவை நோக்கி 32E என்ற தனியார் பேருந்து பயணிகளை ஏற்றி அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிரஸ்காலனி பகுதியில் பேருந்தின் முன்னாள் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதி பேருந்து விபத்துள்ளானது. இதில் பேருந்தின் முன் பக்கம் பலத்த சேதம் அடைந்த நிலையில் பேருந்திற்குள் இருந்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் காயங்களுடன் உயிர்த்தபினர். மேலும் இவ்விபத்தில் பேருந்து மற்றும் லாரிக்கு அருகில் சென்று கொண்டிருந்த சக வாகன ஓட்டிகளுக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் தகவல் அறிந்து வந்த போக்குவரத்து காவல்துறையினர் ஜேசிபி வாகனத்தை கொண்டு பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.
இவ்விபத்தில் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் பொதுமக்கள் உயிர் தப்பிய நிலையில், இவ்வழியாக செல்லும் தனியார் பேருந்துகள் அதி வேகமாக செல்வதையே வழக்கமாக கொண்டிருப்பதாகவும் போக்குவரத்து காவல்துறையினர் இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.