Skip to content
Home » குளித்தலை அருகே குளத்துப்பட்டியில் சாலை அமைக்க 25 வருடமாக கோரிக்கை…. மக்கள் அவதி..

குளித்தலை அருகே குளத்துப்பட்டியில் சாலை அமைக்க 25 வருடமாக கோரிக்கை…. மக்கள் அவதி..

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சி உடைய குளத்துப்பட்டியில் இருந்து மாலப்பட்டி வரை சுமார் 500 மீட்டர் மண் சாலை அமைந்துள்ளது. இந்தப் சாலை அமைந்துள்ள பகுதியில் சுமார் 25க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் காய்கறி வியாபாரம் செய்தும் அருகில் உள்ள ஊர்களுக்கு கூலி வேலைக்கும் சென்று வருகின்றனர்.

கடந்த 35 வருடங்களுக்கு மேலாக இந்த சாலையானது மண்பாதையாகவே பயன்படுத்தப்பட்டது வருகிறது. மேலும் இந்த சாலை உடைய குளத்தப்பட்டியில் இருந்து மாலப்பட்டி வரை குறுகிய 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இதனால் வேலைக்கு சென்று வருபவர்கள், மாலப்பட்டி அரசு பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் விரைவாக சென்று வர இந்த பாதையினை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் மழைக்காலங்களில் இந்த சாலைகளில் மண்ணரிப்பு ஏற்பட்டும், மழைநீர் தேதியும் காணப்படுவதால் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலையில் அப்ப அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் அவதியுற்று வருகின்றனர். அச்சமயங்களில் இவர்கள் முனையனூர், தாராபுரம் உள்ளிட்ட ஊர்களின் வழியாக சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் வரை சுற்றிச் செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.

மேலும் இந்த சாலையை சீரமைத்து தார் சாலை அமைத்தால் மாலப்பட்டி மற்றும் மாயனூர், கரூர் ஆகிய பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த வழியாக சீக்கிரம் செல்ல முடியும் எனவும், இதனால் அரசு பள்ளி மாணவ, மாணவிகளும் பள்ளிகளுக்கு சென்று

வர ஏதுவாக இருக்கும் எனவும், தற்போது மழைக்காலங்களில் இந்த பாதையில் பள்ளி மாணவ, மாணவிகள் செல்லும் போது மண்ணரிப்பு ஏற்பட்ட பள்ளங்களில் கீழே விழுந்து வருகின்றனர்.

இது குறித்து கடந்த 25 ஆண்டுகளாக பேரூராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றிற்கு கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும், வரும் மழை காலத்திற்குள் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் தங்களது குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டையினை தமிழக அரசிடம் திரும்ப ஒப்படைக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம், பேரூராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!