தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஜோதிமலை இறைப் பணி திருக் கூட்ட நிறுவனர், தவத்திரு திருவடிக் குடில் சுவாமிகள் பாபநாசத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்தியாவா, பாரதமா என்றெல்லாம் விவாதிக்கப்படும் நிலையில், இந்த தேசத்தின் ஆணிவேரான பெயர் நாவலந் தீவு என்பதாகும். இதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. திருநாவுக்கரசர் இதனை தனது பாடல்களில் தெரிவித்து உள்ளார்.
நாவ லம்பெருந் தீவினில் வாழ்பவர்
மேவி வந்து வணங்கி வினையொடு
பாவ மாயின பற்றறு வித்திடும்
தேவர் போல்திரு நாகேச் சரவரே.
என்று பாடி அருளினார் திருநாவுக்கரசு நாயனார் என்றார்.