கேரள பருவமழை காரணமாக தென்காசி குற்றாலத்தின் மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் பல்வேறு ஊர்களிலிருந்து குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. நீர்வரத்து சற்று குறைந்திருந்தாலும் பயணிகள் உற்சாகமாக குளித்து பூங்காக்களில் மகிழ்ந்தனர். பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்..
