Skip to content
Home » லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை… ஐகோர்ட்டு உத்தரவு

லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி இல்லை… ஐகோர்ட்டு உத்தரவு

  • by Senthil

நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் 19ம் தேதி வெளிவருகிறது.  இந்த படத்திற்கு 5 நாட்கள்  தலா 5 காட்சிகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.  இந்த நிலையில்  படத்தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம்,  லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என  ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த  நீதிபதி அனிதா சுமந்த் நேற்று வழக்கை விசாரித்து, இன்று தீர்ப்பளிப்பதாக கூறினார். இன்று காலை நீதிபதி அளித்த தீர்ப்பில், அதிகாலை 4 மணி காட்சியை அனுமதிக்க முடியாது. காலை 9 மணிக்கு பதிலாக காலை 7 மணிக்கு  திரையிட அனுமதிப்பது தொடர்பாக  அரசை அணுகுங்கள் என தீர்ப்பளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!